தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, கடந்த சில தினங்களாக தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்களின் அந்தரங்க பக்கங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்து வருகிறார்.
ஏற்கனவே பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப் கிஷன் ஆகியோரின் பெயரை வெளியிட்டு. சிலரை பற்றி மோசமாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இவர் , தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் சுந்தர்.சி மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'இயக்குனர் சிந்தர்.சி 'அரண்மனை 2' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது அந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு போன் செய்ததாகவும். அவரை நேரில் சந்தித்த போது அவர் இயக்குனர் சுந்தர்.சியை அறிமுகம் செய்து வைத்ததாகவும், பின் அந்த சமயம் தன்னுடைய ஃபேஸ்புக் நண்பர் ஒளிப்பதிவாளர் செந்திலையும் தான் சந்தித்ததாக கூறியுள்ளார்.
இயக்குனர் சுந்தர்.சி தனக்கு அவர் இயக்கம் அடுத்த படத்தில் கதாநாயகி வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்து, பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக தெரிவித்து. அதன் பிறகு என்ன நடந்தது என பெருமாளுக்கே தெரியும் என்று அவர் கூறியுள்ளார். ஸ்ரீரெட்டின் இந்த குற்ற சாட்டுக்கள் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது மட்டும் இன்றி நடிகை குஷ்புவின் வாழ்க்கையிலும் சர்ச்சையை ஏற்படுத்து உள்ளது.