
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இல்லத்தில் ஏற்பட்டுள்ள சோகம் அவரது குடும்பதினரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதுகளையும் பெற்றவர். கடைசியாக இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலையும் பாடியவர். இவரது தாயார் சகுந்தலாம்மா இன்று அதிகாலை மரணமடைந்தார்.
83 வயதான அவர் கடந்த சில மாதங்களாக முதுமையாலும், உடல்நலக் கோளாறாலும் சிகிச்சை பெற்று வந்தார். எஸ்.பி.பியின் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள நகரியில் அவர் வசித்துப் வந்தார். லண்டன் சென்றுள்ள எஸ்.பி.பி தனது தாயார் சகுந்தலாம்மா மறைந்த தகவலை அறிந்து இன்று மாலை நெல்லூர் திரும்புகிறார். சகுந்தலாம்மாவின் இறுதிச்சடங்குகள் நாளை நெல்லூரில் நடைபெறுகிறது.
சகுந்தலாம்மாவின் இறுதிச்சடங்கில் திரையுலகை சேர்ந்த பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.