SJ Surya : மீண்டும் போனி கபூருடன் மோதும் எஸ்.ஜே.சூர்யா? "ஆரண்ய காண்டம்" விவகாரத்துடன் மேல்முறையீடு !

By Kanmani PFirst Published Nov 29, 2021, 10:19 AM IST
Highlights

"Vaalee" | வாலி ஹிந்தி ரீமேக்கிற்கு எதிராக எஸ்.ஜே. சூர்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல இயக்குனர் எஸ். ஜே. சூர்யா 1999ஆம் ஆண்டு தனது முதல் படைப்பாக  இயக்கிய படம் வாலி. அஜித்- சிம்ரன் நடிப்பில் வெளியான இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதில் ஒரு வேடத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளியாக நடித்திருப்பார். இந்தப் படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.  தேவா இசையில் அமைந்த இதன் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது.

முதல் படத்திலேயே வித்தியாசமான கதையோடு சாதித்த எஸ்.ஜே சூர்யா அதன் பிறகு தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மிளிர துவங்கினார்.

இவ்வாறு எஸ் ஜே  சூர்யாவின் சாதனை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள வாலி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை பட தயரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளார்.

ஆனால் வாலி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கு போனி கபூருக்கு தடை விதிக்க வேண்டுமென எஸ்.ஜே. சூர்யா நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் போனி கபூருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் வாலி ரீமேக் தொடர்பாக எஸ்.ஜே.சூர்யா உச்ச நீதிமன்றத்தை நடவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு கடந்த 2017 ஆம் ஆண்டு "ஆரண்ய காண்டம் பட தயாரிப்பாளர்கள் மீது அப்படத்தின் இயக்குநர் தியாகராஜ குமாரராஜா தாக்கல் செய்த வழக்கில், “படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும் அதன் ரீமேக் உரிமை கதையை எழுதியவருக்கே இருக்கிறது” என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை அடிப்படையாக வைத்து சூர்யா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!