எஸ்.ஜே.சூர்யா கூட நடிச்சது ஆம்பள எலியா இல்ல பொம்பள எலியா?: செம்ம டவுட்டில் கோடம்பாக்கம்.

By Vishnu PriyaFirst Published Jan 27, 2019, 6:36 PM IST
Highlights

*    ஜெயலலிதா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே அவரையும் விசாரணை ஆணையத்திற்கு விசாரணைக்கு அழைக்க வேண்டும்!: வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன். 
 

*   ஜெயலலிதா தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். எனவே அவரையும் விசாரணை ஆணையத்திற்கு விசாரணைக்கு அழைக்க வேண்டும்!: வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன். 
(சீக்கிரம் கூப்பிடுங்க சார் அவரை. நீங்க ஏதாச்சும் யோசனையில காலம் கடத்துனா, ஆணைய வாசல்ல ’விசாரணைக்கு கூப்பிடும் வரை வீரியமான போராட்டம்’ன்னு அறிவிச்சு, கொடிய தூக்கிட்டு வந்துட போறாரு.)

*   சென்னையில் நடந்தது புத்தக கண்காட்சியா இல்லை, ஜவுளிக்கடையான்னு தெரியலை. சம்பந்தமே இல்லாமல் ஊசி பாசி கடைக்கெல்லாம் இடம் கொடுத்திருந்தனர்!: புகார். 
(நல்லா கவனியுங்க, இந்த பஞ்சாயத்தை வெச்சே, அடுத்த புக் எக்ஸ்போவுக்கு ‘புத்தக கண்காட்சி நடத்துவது எப்படி?’ன்னு குறைஞ்சது நாற்பது பேராச்சும் புக்கு எழுதுறாங்களா இல்லையான்னு!)

*    மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கும், எலிக்கும் காம்பினேஷன் சீன்கள் இருக்கின்றன. இதுவரையில் இப்படியொரு கேரக்டரில்  எஸ்.ஜே.சூர்யாவை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்!: டைரக்டர் நெல்சன் வெங்கடேசன். 


(காம்பினேஷன் காட்சியில எலிய பார்த்து ‘ஏய், ஆ! ஊ!’ன்னு எஸ்.ஜே.எஸ். விட்ட சவுண்டுல எலி பயந்து பதறி செத்துருக்குமே! 
அது கெடக்கட்டும் அவரு கூட நடிச்சது ஆண் எலியா இல்ல பெண் எலியா சார்?)

*   கம்யூனிஸ்ட்களை பற்றிய ஒவ்வொரு விமர்சனத்துக்கும் கம்யூனிஸ்டுகள் பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்கிற அவசியமே கிடையாது! வரலாறு பதில் சொல்லும்!: டி.கே.ரங்கராஜன். 
(யாருப்பா சொன்னது....கம்யூனிஸ்ட்டுல பொதுவுடமைதான் உண்டு, சர்வாதிகாரமெல்லாம் கிடையாதுன்னு. அவன்லாம் வரிசையா வந்து டி.கே.ஆர்.ட்ட மன்னிப்பு கேளுங்க.)

*   தமிழகத்தில் நடக்கும் ஆவி ஆட்சியும், மத்தியில் நடக்கும் காவி ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும்!: ஸ்டாலின். 
(மைக் கிடைச்சுதேன்னு ஆவி, காவின்னு நீங்க ரைமிங்கா பட்டைய கெளப்புறீங்களே திருநா. ஆனால், உங்களை ‘பாவி’ன்னு போட்டு வெளுக்குறாரே இளங்கோவன்.)

click me!