பார்வையில்லாத சிறுமியின் திறமையை பார்த்து திகைத்து போன சிவகார்த்திகேயன்..! நெகிழ்ச்சி பதிவு..!

By manimegalai aFirst Published Jul 19, 2020, 7:03 PM IST
Highlights

நடிகர் சிவகார்த்திகேயன், பார்வையற்ற சிறுமி ஒருவரின் திறமையை கண்டு, அவருக்கு மனதார வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட ட்விட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

கொரோனா பீதி காரணமாக, அணைத்து பட வேலைகளும் முழுமையாக முடங்கி இருந்தாலும், ரசிகர்கள் அவ்வப்போது தங்களுக்கு பிடித்த நடிகர்கள் படங்களில் இருந்து, ஏதானும் புதிய அப்டேட், வெளியிடும் படி தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று...  சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் ‘டாக்டர்’  படத்தில் இருந்து செல்லமா என்கிற பாடல், ஜூலை 16 ஆம் தேதி அன்று வெளியானது. இதனை ரசிகர்களுக்கு தெரிவிப்பதை கூட மிகவும் வித்தியாசமாகவே வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தனர்.

சிவகார்த்திகேயன் தான் இந்த பாடலுக்கான வரிகளை எழுதி உள்ளார். 'இனிமேல் டிக் டாக் எல்லாம் Banமா.. நேரா டூயட் பாட வாயேன் மா..' என துவங்குகிறது இந்த பாடல். அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகிய இருவரும் தான் இணைந்து இந்த பாடலை பாடி உள்ளனர். இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் பாடலின் மியூசிக் குறித்து வெளியான தகவல் ஒன்று வெளியானது.

அதாவது இந்த பாடல் சிம்புவின் கண்ணம்மா கண்ணம்மா பாடலை ஸ்லோ மோஷனில் கேட்பது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதை வீடியோ மீம்ஸாக கிரியேட் செய்து சோசியல் மீடியாவில் சுத்தவிட்டுள்ளனர்.

 

இப்படி பல்வேறு விமர்சனங்கள் இந்த பாடலுக்கு வந்தாலும், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடலுக்கு நல்ல  விமர்சனங்களும் கிடைத்தது. இந்நிலையில் இந்த பாடலை பார்வையற்ற சிறுமி ஒருவர், கீ- போர்டில் வாசித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கண்களில் பட அந்த சிறுமியின் திறமையை பாராட்டி சூப்பர் மா என பதிவிட்டுள்ளார். இவர் மட்டும் இல்ல, இந்த சிறுமியின் திறமைக்கு பல லைக்குகள் குவிந்து வருகிறது.

அந்த வீடியோ இதோ...

Fun filled romantic song from the movie single track cover by
An Musical lyrical by directed by pic.twitter.com/JYBU8ZLMSP

— SahanaNiren (@sahana_singer)

click me!