
நடிகர் சிம்பு தற்போது புதிய எனெர்ஜியுடன் கம் பேக் கொடுத்துள்ளார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் இவரின் அடுத்த ரிலீசுக்கு இப்போதே தயாராகி விட்டனர்.
லண்டன் சென்று எடைக் குறைப்பு சிகிச்சையை மேற்கொண்டு , மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வரும் சிம்புவிற்கு அடுக்கடுக்காக பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் இப்போது, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும், 'மாநகரம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சிம்பு, இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2003 ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'கோவில்' படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது 16 வருடங்களுக்கு பின் மீண்டும் அவருடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
சமீப காலமாக இயக்குனர் ஹரி 'சிங்கம் 3' , 'சாமி 2 ' என பார்ட் 2, பார்ட் 3 திரைப்படம் இயக்கி வந்த நிலையில், தற்போது முற்றிலும் மாறுபட்ட கதை காலத்தில் இப்போது, சிம்புவை வைத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.