தீவிரவாத செயலை தூண்டும் சித்தார்த்... பாஜக சார்பில் பரபரப்பு புகார்!

By manimegalai aFirst Published Apr 29, 2021, 5:09 PM IST
Highlights

தமிழ் சினிமாவில் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும், நடிகர் சித்தார்த் நடிப்பை தாண்டி, அண்மைக் காலமாக அரசியல் சார்ந்த கருத்துக்களை நேரடியாகவும், காட்டமாகவும், தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் கருத்துக்களுக்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
 

தமிழ் சினிமாவில் தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும், நடிகர் சித்தார்த் நடிப்பை தாண்டி, அண்மைக் காலமாக அரசியல் சார்ந்த கருத்துக்களை நேரடியாகவும், காட்டமாகவும், தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் கருத்துக்களுக்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

அந்த வகையில் அண்மையில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் ஆக்ஸிஜன் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களுக்கு சித்தார்த் மிகவும் காட்டமாக பதிவிட்ட பதிவு, மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. 

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்களுடைய மாநிலத்தில் ஆக்சிஜன் இல்லை என்று யாராவது வதந்தியை கிளப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த கருத்துக்கு தான் சித்தார்த் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் பதில் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மிரட்டும் விதமாக நடிகர் சித்தார்த் பேசியுள்ளதாக, அவர் மீது தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை ஆணையரிடம் அளிக்கப்பட்ட இந்த புகாரில் சித்தார்த் தீவிரவாத செயலை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்து வருவதால்,  அவரை கைது செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கபாடகிறது.

click me!