அப்பா - தங்கையுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்! அவரே வெளியிட்ட வீடியோ!

Published : Apr 30, 2019, 03:53 PM IST
அப்பா - தங்கையுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்! அவரே வெளியிட்ட வீடியோ!

சுருக்கம்

நடிகை ஸ்ருதிஹாசன், தந்தை மற்றும் தங்கை ஆகிய மூவரின் கூட்டனில் உருவான 'சபாஷ் நாயுடு' படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுளள்து. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மாற்று மற்ற தகவல்கள், குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.  

நடிகை ஸ்ருதிஹாசன், தந்தை மற்றும் தங்கை ஆகிய மூவரின் கூட்டனில் உருவான 'சபாஷ் நாயுடு' படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுளள்து. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மாற்று மற்ற தகவல்கள், குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த படத்திற்கு பின், ஸ்ருதிஹாசனும் தமிழில் எந்த படங்களிலும் நடிக்க கவனம் செலுத்தாமல் இருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது, விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதை அவரே வெளிப்படையாக கூறினார். இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்நிலையில், மீண்டும் தன்னுடைய அப்பா கமலஹாசன் தயாரிப்பில், அக்ஷராஹாசன் நடிகர் விக்ரமுடன் நடித்து வரும் 'கடாரன் கொண்டான்' படத்தில் ஸ்ருதி இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கி வரும் இந்த படத்தில், ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளர், ஜிம்ரன் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலின் சிங்கள் ட்ராக் மே 1 ஆம் தேதி வெளியாக உள்ளதாக, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!