மனித தலையை வெட்டி நரபலி பூஜா? நானும் போலீசுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்... நடிகர் பார்த்திபன் பகீர் ட்வீட்!

By manimegalai aFirst Published Dec 4, 2023, 1:26 PM IST
Highlights

இரண்டு மனித தலையை வெட்டி நரபலி பூஜை செய்துள்ளது போல்... சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள வீடியோவை டேக் செய்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் போட்டுள்ள ட்வீட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

உலகமே தொழில்நுட்ப வளர்ச்சியால்.. அதி நவீனமாக மாறி வந்தாலும், சில மூட நம்பிக்கைகள் பல இடங்களில் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இது முற்றிலும் தவறான விஷயம் என பல விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலும்... சிலர் தொடர்ந்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு கொண்டிருப்பதை பல சமயங்களில் செய்திகள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

மேலும் இது போன்ற சம்பவங்கள் திரைப்படங்களிலும் அதிகம் காட்டப்படுகிறது. இந்நிலையில் இதுபோன்ற ஒரு கொடூரமான வீடியோ தான், தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது உண்மையா? அல்லது திரைப்பட ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டப்பா என்பது தெரிவியவில்லை.

Latest Videos

இரண்டு இளைஞர்களின் தலை துண்டாக வெட்டப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த தலைகளின் பக்கத்திலேயே இருவரது சடலமும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடக்கிறது. காளி வேடத்தில் ஒருவர் கையில் கத்தியோடு ஆடிக்கொண்டிருக்க, ஆசாமியார் ஒருவர் பூஜை செய்கிறார். இதனை பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் உச்சகட்ட அதிர்ச்சியில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், "இது என்ன வென யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள். நானும் போலீஸுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்". என கூறியுள்ளார். இதை தொடர்ந்து பலர் அறிவியல் வளர்ந்தாலும் இந்த மூட நம்பிக்கைகள் அழிந்தபாடு இல்லை. ஒருவேளை இது உண்மையாக இருந்தால்... அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இது என்ன வென யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள். நானும் போலீஸுக்கு தெரியப்படுத்தியுள்ளேன். https://t.co/ib5UBTR3A7

— Radhakrishnan Parthiban (@rparthiepan)

 

click me!