Vadivelu: அதிர்ச்சி... லண்டனில் இருந்து வந்த கையோடு வடிவேலுக்கு இந்த நிலையா? மருத்துவமனையில் திடீர் அனுமதி!

By manimegalai aFirst Published Dec 24, 2021, 4:03 PM IST
Highlights

நடிகர் வடிவேலுக்கு (Vadivelu) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து திரை பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால், மீண்டும் தமிழகத்தில் கொரோனாவின் அலை அதிகரிக்க துவங்கி உள்ளதா? என்கிற அச்சம் எழுந்துள்ளது. சமீபத்தில் தான் நடிகர் கமல், அர்ஜுன், மற்றும் விக்ரம் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வரும்  தகவல் வெளியாகி வைரலானது. இவர்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படம் நடிக்க துவங்கியுள்ள, வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நடிகர் வடிவேலு 'மாநகரம்' படத்தின் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 'நாய் சேகர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பூஜையோடு துவங்கியது. பின்னர் சாங் கம்போசிங் பணிக்காக, படக்குழுவினர் லண்டன் சென்றனர். நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜுடன் லண்டன் சாலையில் நின்றபடி எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரலானது.

சாங் கம்போசிங் பணிகள் முடிந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் நடிகர் வடிவேலு சென்னை திரும்பியுள்ளார். எனவே இன்னும் ஓரிரு தினங்களில் படப்பிடிப்பை துவங்க படக்குழுவினர் தீவிரம் காட்டி வந்த நிலையில், லண்டனில் இருந்து வந்த கையேடு... வடிவேலுவுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படவே, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மீம்ஸ் நாயகன் நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவல் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவர் விரைவில் குணமடைய வேண்டும் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!