ரஜினிக்கு தொடர்ந்து 15 வருடங்களுக்கு பின் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

Published : Apr 12, 2019, 12:52 PM IST
ரஜினிக்கு தொடர்ந்து 15 வருடங்களுக்கு பின் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

சுருக்கம்

80  மட்டும் 90 களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் பிரபல நடிகை ஷோபனா.  

80  மட்டும் 90 களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் பிரபல நடிகை ஷோபனா.

நடன கலைஞர், நடன பயிற்சியாளர், மிருதங்க வித்வான், என பல்வேறு திறமைகளை கொண்ட இவர், நடிப்பையும் தாண்டி தன்னுடைய கலை வாழ்வை தொடர்ந்து வருகிறார்.

கடைசியாக, இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். பின் முழுமையாக திரையுலகில் இருந்து விலகி, சின்னத்திரை டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பாரத நாட்டிய பயிற்சியிலும் கவனத்தை செலுத்தினார். 

இந்நிலையில் 15 வருடங்களுக்கு முன் 'மகளும்' என்கிற படத்தில் நடிகர் சுரேஷ் கோபிக்கு ஜோடியாக ஷோபனா நடித்திருந்தார். அதை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் படத்தின் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். தற்போது மீண்டும் நடிகர் சுரேஷ் கோபிக்கு ஜோடியாக  நடிக்க உள்ளனர்.

இந்த படத்தின் மூலம் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு மகன், அனூப் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பல மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்ற ஷோபனாவின் ரீ-என்ரியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!