பிக்பாஸ் வீட்டில் ஷிவானிக்கு இந்த நிலையா? உச்ச கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

By manimegalai aFirst Published Oct 16, 2020, 11:05 AM IST
Highlights

பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் எதிர்பாராத டாஸ்குகள், மற்றும் திருப்புமுனைகள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம்... தொகுப்பாளர் அர்ச்சனா வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். உள்ளே வந்த கணமே யார் யார் எப்படி என, அவர்கள் கழுத்தில் போர்டு ஒன்றை மாற்றி வெட்டவெளிச்சமாக்கினார்.
 

பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் எதிர்பாராத டாஸ்குகள், மற்றும் திருப்புமுனைகள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம்... தொகுப்பாளர் அர்ச்சனா வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். உள்ளே வந்த கணமே யார் யார் எப்படி என, அவர்கள் கழுத்தில் போர்டு ஒன்றை மாற்றி வெட்டவெளிச்சமாக்கினார்.

இது ஒரு புறம் இருக்க, இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் முதல் புரோமோ ஷிவானியின் ரசிகர்களை உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, பிக்பாஸ் குரல் இந்த வீட்டில் மிகவும் சுவாரஸ்யமும், ஈடுபாடும் இல்லாமல் இருக்கும் இரண்டு நபர்கள் யார்? என அணைத்து போட்டியாளர்களை தேர்வு செய்ய சொல்கிறார். இதில் பெரும்பாலானவர்கள், ஷிவானியின் பெயரையும் ஜித்தன் ரமேஷ் பெயரையும் கூறுகிறார்கள். புதிதாக வீட்டுக்குள் வந்த அர்ச்சனா கூட இவர்கள் பெயரை தான் கூறுகிறார்.

எனவே இவர்கள் இருவரையும், ஒரு கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்ட சொல்கிறார். இதை பார்த்த பாலா, பாவம் இந்த பொண்ணை எல்லாரும் போட்டு விட்டுருக்காங்க என வருத்தத்தோடு தெரிவிக்கும் கட்சியும் இடம்பெற்றுள்ளது. 

இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்ட, ஷிவானிக்கு இந்த நிலையா என ரசிகர்கள் பலர் புலம்பி வருகிறார்கள். 

அந்த ப்ரோமோ இதோ...

click me!