ஜாதி பற்றி பேசி சர்ச்சை..! மன்னிப்பு கேட்டார் நடிகை ஷில்பா ஷெட்டி!

First Published Dec 25, 2017, 2:39 PM IST
Highlights
shipa shetty controversy talk


நடிகர் பிரபு தேவா நடித்த 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். 

அப்போது பேசிய அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதி குறித்து கருத்து தெரிவித்தார். இவர் கூறிய கருத்திற்கு அந்த ஜாதியை சேர்ந்த ஒரு சிலர், ஷில்பா ஷெட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து.

மும்பை மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் இவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான் கான் மற்றும் ஷில்பா ஷெட்டி மீது மும்பை காவல்துறையினரிடம் புகாரும் கொடுக்கப்பட்டது. 

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி தான் கூறிய கருத்திற்கு சம்மந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியுள்ளது: நான் பேசிய சில வார்த்தைகள் தவாறாக அர்த்தம் கொள்ளப்பட்டிருகிறது, எனக்கு யாருடைய உணர்வையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒரு வேலை நான் கூறிய வார்த்தைகள் உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்... பல்வேறு சாதி, சமயங்களை கொண்ட இந்த நாட்டில் வழ்வதேயே பெருமையாக கருதுகிறேன் என்றும் ஒவ்வொருவரையும் நான் மதிக்கிறேன் என ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

click me!