15 வயதிலேயே பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர்! பிரபல நடிகை கதறல்!

By manimegalai aFirst Published Oct 25, 2018, 7:24 PM IST
Highlights

தமிழ் சினிமாவில் டார்லிங், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இவரின் சகோதரி சஞ்சனா கல்ராணி சிறு வயதிலேயே கன்னத்திரையுலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 

தமிழ் சினிமாவில் டார்லிங், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி. இவரின் சகோதரி சஞ்சனா கல்ராணி சிறு வயதிலேயே கன்னத்திரையுலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 

இன்னலையில் இவர்  தனக்கு 15 வயது இருக்கும்போது இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா பாலியல் கொடுத்ததாக கண்கள் கலங்கியவாறு கூறியுள்ளது மீடூ மீதான பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

கன்னடத்தில் பிரபல நடிகையாக இருக்கும் சஞ்சனா கல்ராணி கடந்த 2006ஆம் ஆண்டு 'கண்ட ஹெண்டதி' என்ற கன்னட படத்தில் நடித்தார்.  மல்லிகா ஷெராவத் நடித்த 'மர்டர்' படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு முத்தக்காட்சியை வேண்டும் என்றே  50 முறை எடுத்து தனக்கு பாலியல் தொல்லை  இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா கொடுத்தார் என கூறியுயுள்ளார். 

இந்த புகாரை இயக்குனர் ரவி ஸ்ரீவத்சா முழுமையாக மறுத்தார்.  பின் இது குறித்து கருத்து கூறிய சஞ்சனா, 'எந்த திருடராவது தன்னை திருடர் என்று ஒப்புக்கொண்டது உண்டா? நான் பல இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ளேன். அவர்கள் குறித்து நான் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. இவர் தவறானவர் என்பதால் தான் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றேன்' என்று கண் கலங்கியவாறு தெரிவித்துள்ளார்.

click me!