திரைத்துறையையும், சில்மிஷ புகாரையும் பிரிக்கவே முடியாது. தினம் தினம் அரங்கேறும் புகாரில் உதவி இயக்குநர் ஒருவர் தன்னை காருக்குள் வைத்துப் சில்மிஷம் செய்ததாக அதிரடி புகாரை அளித்திருக்கிறார் பிரபல நடிகை.
திரைத்துறையையும், சில்மிஷ புகாரையும் பிரிக்கவே முடியாது. தினம் தினம் அரங்கேறும் புகாரில் உதவி இயக்குநர் ஒருவர் தன்னை காருக்குள் வைத்துப் சில்மிஷம் செய்ததாக அதிரடி புகாரை அளித்திருக்கிறார் பிரபல நடிகை.
திரைத்துறையை ஆட்டுவித்து வந்த மிடூ புகார் ஓய்ந்திருந்த நிலையில் ’பபுமோஷாய் பண்டூக் பாஸ்’ என்ற ஹிந்தி படத்தில் அதிரடி கவர்ச்சி காட்டி புகழ்பெற்ற பிரபல நடிகையான பிடிடா பேக் ஒரு புகாரை கொடுத்துள்ளார். அதில், ‘’இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் (இவரை சுற்றியே ஏகப்பட்ட சில்மிஷ புகார்கள் டஜன் கணக்கில் இருக்கிறது) உதவியாளராக இருந்த இயக்குனர் ஒருவர் முதலில் தன் படத்தில் நடிக்க ஹீரோயின் வேண்டும் என கூறி அணுகினார்.
பிரபல இயக்குனரின் உதவியாளர் என்பதால் அவருடன் நட்பாக பழகினேன். ஆனால் ஒருநாள் பார்ட்டி முடிந்து வீடு திரும்பும் வழியில் காரில் அந்த உதவி இயக்குனர் தவறாக நடக்கமுயற்சித்தார். என்னை விட்டுவிடு என கெஞ்சினேன். இதெல்லாம் ஒரு விஷயமா... என்ஜாய் பண்ணலாம் வா என சொன்னார். ஆனால், அவர் என்னை ரேப் பண்ணவில்லை. என்றாலும், என்னிடம் நட்பாக பழகிவிட்டு எப்படி பாலியல் தொல்லை கொடுக்க முடியும்’’ என வேதனை படுகிறார் பிடிடா பேக். இதென்னடா பேரு.. பிடிடா பேக்..!