என் மீது குத்தப்பட்ட இந்த முத்திரை...! வாய்ப்புகள் இல்லை...! வருத்தத்தோடு கூறும் சீரியல் நடிகை கௌதமி..!

 
Published : Jun 28, 2018, 06:57 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
என் மீது குத்தப்பட்ட இந்த முத்திரை...! வாய்ப்புகள் இல்லை...! வருத்தத்தோடு கூறும் சீரியல் நடிகை கௌதமி..!

சுருக்கம்

seriyal actress gowthami feeling speech for movie

சின்னத்திரையில் பல சீரியல்களில் அம்மா, மாமியார் போன்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சீரியல் நடிகை கௌதமி. 

இவருக்கு சிறந்த நடிகை என்கிற பெயரை பெற்று தந்தது, நடிகர் சஞ்சீவ்விற்கு அம்மாவாக இவர் நடித்திருந்த 'திருமதி செல்வம்' சீரியல் தான். இந்த சீரியலை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது வரை 'பாக்கியம்' தான் அனைவருடைய நினைவிற்கும் முதலில் வரும்.

 

இந்த சீரியலில், இவர் நடிப்பை நிஜம் என்று நினைத்து பல ரசிகர்கள் இவரை கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளனர். 

இவர் ஒரு சில, திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் சின்னத்திரையில் கிடைத்த அங்கீகாரம் வெள்ளித்திரையில் இவருக்கு கிடைக்க வில்லை. 

இருப்பினும் வெள்ளித்திரையில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என இவர் வாய் திறந்து வாய்புகள் கேட்டாலும், சின்னத்திரையில் பிரபலமான நடிகை என்கிற முத்திரை தன் மீது பதிந்து விட்டதால், வெள்ளித்திரையில் வாய்புகள் கொடுக்க தயங்குவதாகவும்... இதனால் தனக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை என்றும் வருத்ததோடு கூறியுள்ளார் கௌதமி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்