
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தனி மவுசு என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் இதுவரை காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் பணியாற்றி உள்ளனர்.
அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்திலும் தனுஷ் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர இவர்கள் இருவரும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
இவ்வாறு பிசியான இயக்குனராக வலம் வரும் செல்வராகவன், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காயிதம் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பீஸ்ட் படத்துக்கு பின்னர் செல்வராகவனுக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. சமீபத்தில் திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் செல்வராகவன்.
இந்நிலையில், தற்போது மேலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க அவர் கமிட் ஆகி உள்ளார். மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ்ன் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.