அப்படி இருந்த நான்... இப்படி ஆனது எப்படி... செல்வராகவன் மனைவி கொடுத்த டிப்ஸ்!

 
Published : Nov 11, 2017, 07:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
அப்படி இருந்த நான்... இப்படி ஆனது எப்படி... செல்வராகவன் மனைவி கொடுத்த டிப்ஸ்!

சுருக்கம்

selvaragavan wife give the slim tips

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைக் கொண்ட தரமான படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கிய அனைத்து படங்களுக்கும் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

அதே போல் அவரிடம், துணை இயக்குனராக இருந்து செல்வராகவனைக் காதலித்து கரம்பிடித்த அவரது மனைவி கீதாஞ்சலியும் 'மாலை நேரத்து மயக்கம்' என்ற தரமான படத்தை இயக்கியவர்.

இவர் கடந்த ஆண்டு மிகவும் குண்டாக இருந்தார். ஆனால் தற்போது மிகவும் ஸ்லிம்மாக செம பிட்டாக மாறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 

இதனால் இவருடைய தோழிகள் பலர் எப்படி இவளோ ஸ்லிம்மாக மாறினாய் என தொடர்ந்து போன் மூலம் விசாரித்து வருகின்றார்களாம். 

இதானால் தான் ஏன் உடல் எடையை குறைத்தேன் என்பதை அவரே கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில்  ‘எல்லோரும் சொல்வதற்காகவும், குண்டாக இருக்கின்றோம் உடல் எடையை குறைத்தே ஆகவேண்டும் என்பதற்காகவும் இதை நான் செய்யவில்லை. எனக்கு நீண்ட நாட்களாகவே ஹிப்பில் வலி இருந்தது, இதனால், டாக்டர் அட்வைஸ் கேட்டபின் உடல் எடையை குறைக்க ஆரம்பித்தேன், கார்டியோ எக்ஸஸைஸ் இரண்டு மணிநேரம் செய்தேன். நடப்பேன், இருபது நிமிடம் ஓடுவேன். 45 நிமிடங்கள் மற்ற சில உடற்பயிற்சி, அரைமணி நேரம் நீச்சல் அடிப்பேன், இதனுடன் டயட் இருப்பேன்’ என்று கூலாக கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மேக்கப் தொல்லை எனக்கு இல்லை... நடிகை சாய் பல்லவி ஓபன் டாக்
ஆஸ்கர் ரேஸில் அடுத்த லெவலுக்கு சென்ற ஒரே ஒரு இந்திய படம் - விருதை தட்டிதூக்குமா?