ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடி ட்விட்..!

By manimegalai aFirst Published Jul 28, 2020, 11:28 AM IST
Highlights

ஏ.ஆர்.ரகுமான் வானொலி நிகழ்ச்சி ஒன்றில், பாலிவுட் திரையுலகில் தனக்கு வரும் வாய்ப்புகளை தடுப்பதற்காக ஒரு கூட்டம் உள்ளதாக, அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி ட்விட் போட்டுள்ளார்.
 

ஏ.ஆர்.ரகுமான் வானொலி நிகழ்ச்சி ஒன்றில், பாலிவுட் திரையுலகில் தனக்கு வரும் வாய்ப்புகளை தடுப்பதற்காக ஒரு கூட்டம் உள்ளதாக, அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி ட்விட் போட்டுள்ளார்.

சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை விவகாரம் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை மிகவும் பாதித்தது. சுஷாந்தின் கடைசி படமான “தில் பேச்சாரா” படத்தின் இசையமைப்பாளராக மட்டுமல்லாது, திரைத்துறையில் ஒரு நல்ல கலைஞனை இழந்ததற்காக வருத்தப்பட்டார் ஏ.ஆர்.ரகுமான். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் இந்தி திரையுலகினர் சிலரால் அவர் புறக்கணிக்கப்பட்டது தான் என்பது போன்ற கருத்தையும் தெரிவித்தார். 

இந்நிலையில் தானும் இந்தி திரையுலகில் இருந்து புறக்கணிக்க படுவதாகவும் தனக்கு எதிராக ஒரு கும்பல் செயல்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பிரபல வானொலி நிகழ்ச்சி ஒன்றின் பேட்டியில் பேசிய அவர்,  இந்தி படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். இவர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர், இசையமைப்பதற்காக தன்னை அணுகிய போது பலர், ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த வாய்ப்பை கொடுக்க வேண்டாம் என தடுத்ததாக தெரிவித்துள்ளார். 

இதனால் கொதித்து போன ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் #ARRahman என்ற  ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்தனர். அதில் ஒட்டுமொத்த இந்தியாவையும் இரு கையில் ஆஸ்கர் விருது ஏந்தி தலை நிமிர வைத்த, இசைப்புயலுக்கே இந்த நிலையா? என வருத்தத்துடனும், கோபத்துடனும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

பல பிரபலங்களும் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது மட்டும் இன்றி, தென்னிந்தியார் என்கிற காரணத்தால் ஏ.ஆர்.ரகுமான் பாலிவுட் திரையுலகில் இருந்து புறக்கணிக்க படுவதாகவும் கூறி வந்தனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக தமிழ்நாடு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய கருத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் திரு. @arrahman தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.

எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்து கொள்கிறேன்.

click me!