"தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்" - நடிகர் சத்யராஜ் உறுதி

Asianet News Tamil  
Published : Apr 21, 2017, 02:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
"தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்" - நடிகர் சத்யராஜ் உறுதி

சுருக்கம்

sathyaraj says that he will give voice for TN people

நடிகர் சத்யராஜ் கன்னட மக்களுக்கு எதிராக பேசியதாக கூறி அவர்  நடித்த பாகுபலி-2 படத்திற்கு கர்நாடாகாவில் எழுந்த பிரச்னையை தொடர்ந்து, அப்படத்தில் கட்டப்பாவாக நடித்த நடிகர் சத்யராஜ், மன்னிப்பு கேட்டுள்ளார். 
 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கடந்த 9 வருடங்களுக்கு முன் காவிரி நதிநீர் பிரச்சனையில்  கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள்.

இதுதொடர்பாக தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த போராட்டத்தின் போது நான் உட்பட பல திரையுலகினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். அதில் நான் பேசிய கருத்து கன்னட மக்களை புண்படுத்துவதாக அறிகிறேன். அதற்காக 9 வருடங்களுக்கு பிறகு கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கர்நாடக மக்களிடம் மன்னிப்புக் கேட்பதால்,என் மீது அக்கறை கொண்ட தமிழ் ஆர்வலர்களும், தமிழ் மக்களும், நலம்விரும்பிகளும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தில் ஒரு சிறிய தொழிலாளி தான் நான். என் ஒருவனுக்காக பல ஆயிரம் பேரின் உழைப்பு மற்றும் பணம் விரயமாக விரும்பவில்லை. அதுமட்டுமல்ல பாகுபலி-2வை கர்நாடகாவில் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நஷ்டமடைய வேண்டாம். என்பதே என் எண்ணம் என குறிப்பிட்டுள்ளார்

ஆனாலும் இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் பிரச்னையாக இருந்தாலும், விவசாயிகளின் பிரச்னையாக இருந்தாலும் சரி தமிழர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளுக்கு எனது குரல் ஓங்கி ஒலித்து கொண்டு தான் இருக்கும் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்வதாக நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

இப்படி நான் செய்வதால், என்னை வைத்து படம் தயாரித்தால் பிரச்னை வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள், இந்த சின்ன நடிகனான சத்யாரஜை யாரும் தங்களது படங்களில் நடிக்க வைக்க வேண்டாம்.

என்னை யாரும் அணுக வேண்டாம், என்னால் யாரும் நஷ்டப்பட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதை விட எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாமல் ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும் எனக்கு மகிழ்ச்சி என சத்யராஜ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மாமியாருக்கு செக் வைத்த மருமகன்! கார்த்திக்கின் மாஸ்டர் பிளான் - சிலை திறப்பு விழாவில் நடந்த அதிரடி ட்விஸ்ட்!
Anirudh: கோடி கோடியாக கொட்டினாலும் தீராத ஏக்கம்.! அனிருத்தின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி.!