Kutra Parambarai : குற்றப் பரம்பரையை தூசி தட்டும் சசிகுமார்... அரசியல் வாரிசை ஹீரோவாக நடிக்க வைக்க திட்டம்

By Asianet Tamil cinemaFirst Published May 10, 2022, 3:22 PM IST
Highlights

Kutra Parambarai : 'குற்றப்பரம்பரை' நாவலை வெப் தொடராக உருவாக்கும் முயற்சியில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் மும்முரமாக களம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' என்னும் நாவல் மிகவும் பிரபலமானது. இந்த நாவலை, படமாக்க, தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் பாலா ஆகியோர் முயன்றனர். அதில் இருவருக்கும் இடையே பணிப்போர் ஏற்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

 கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால், இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாகவே விமர்சித்துக் கொண்டனர். பின் இருவரும் இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்த பின்னர் தான் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்தப் பிரச்சனைக்கு பின்னர்,  இருவருமே 'குற்றப்பரம்பரை'யை படமாக்கும் முயற்சியை கைவிட்டனர்.

Latest Videos

இந்நிலையில் தற்போது 'குற்றப்பரம்பரை' நாவலை வெப் தொடராக உருவாக்கும் முயற்சியில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் மும்முரமாக களம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரின் கதையை வேல ராமமூர்த்தி எழுத உள்ளதாகவும், பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்த வெப் தொடரை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் மகன் நாயகனாக நடிக்க உள்ளாராம்.

ஏற்கனவே சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற படங்களை இயக்கிய சசிகுமார், இதன்பின்னர் கடந்த 12 ஆண்டுகளாக எந்த ஒரு படத்தையும் இயக்காமல் நடிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் 'குற்றப்பரம்பரை' மூலம் அவர் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாரதிராஜா, பாலா போன்ற ஜாம்பவான் டைரக்டர்கள் இயக்க ஆசைப்பட்ட குற்றப்பரம்பரை, சசிகுமாரின் முயற்சியில் உயிர்பெறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... Nayanthara : அம்மாவான நயன்தாராவுக்கு தொல்லை கொடுக்கும் இயக்குனர் - வெளியான ஷாக்கிங் தகவல்

click me!