கமலைத்தவிர யாரு வேணும்னாலும் ஜாதிப்படம் எடுக்கலாம்... இதோ கிளம்பிட்டாரு சசிக்குமாரு...

By sathish kFirst Published Nov 13, 2018, 9:56 AM IST
Highlights

கமல் ’தேவர் மகன்2’ எடுக்கப்போவதாகச் சொன்னதும் வானத்துக்கும் பூமிக்குமாய் குதிக்கும் கிருஷ்ணசாமி வகையறாக்கள், அந்த அளவுக்கு பப்ளிசிட்டி கிடைக்காது என்பதாலோ என்னவோ மற்றவர்களை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை.

கமல் ’தேவர் மகன்2’ எடுக்கப்போவதாகச் சொன்னதும் வானத்துக்கும் பூமிக்குமாய் குதிக்கும் கிருஷ்ணசாமி வகையறாக்கள், அந்த அளவுக்கு பப்ளிசிட்டி கிடைக்காது என்பதாலோ என்னவோ மற்றவர்களை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை.

இதோ, அடிக்கடி சாதிப்படங்களில் குளிர்காய்ந்துகொண்டு வரும் இயக்குநர் சசிக்குமார் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற தலைப்புடன் ஒரு குறிப்பிட்ட ஜாதிப்பெருமை பேசும் படத்தை அறிவித்துள்ளார். இப்படத்தை அவரை வைத்து ‘சுந்தரபாண்டியன்’ என்ற ஜாதிப் பகுமானம் பேசும் படத்தை இயக்கிய பிரபாகரன் இயக்குகிறார். 

இப்படத் துவக்கம் குறித்து தயாரிப்பாளர் தரப்பு அனுப்பியுள்ள பத்திரிகை குறிப்பு இதோ...தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து SR.பிரபாகரன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப்படத்தை தொடர்ந்து ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது இந்த கூட்டணி.

 

1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா  செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

 

இன்று நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பை நடிகர், இயக்குனர் சமுத்திரகனி கிளாப் அடித்து துவக்கிவைத்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் நடந்து குற்றாலத்தில் நிறைவடைகின்றது. 

அட்லீஸ்ட் பட ரிலீஸ் சமயத்திலாவது இந்த ஜாதி சிங்கத்தின் கொம்பில் கைவைக்க யாராவது முன்வருகிறார்களா என்று காத்திருந்து பார்ப்போம்.

click me!