
முதல் படமான தீனா’ தவிர்த்து தனது அனைத்துப்படங்களிலும் கதைத்திருட்டு சர்ச்சையில் மாட்டிவந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முறையாக தனது திருட்டை ஒப்புக்கொண்டு மண்னைக்கவ்வினார்.
உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் முன்னிலையில் ‘சர்கார்’ கதைத்திருட்டு தொடர்பான விசாரணை நடந்துவந்தது. இன்று தீர்ப்பு அறிவிக்கப்படுவதாக இருந்த இந்த விசாரணைக்கு இயக்குநர் முருகதாஸ் சன் பிக்ஷர்ஸ் தயாரிப்பாளர்களும் ஆஜராகியுள்ளனர். வழக்கில் பாதிக்கப்பட்ட உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனின் ஆதரவாளர் இயக்குநர் பாக்கியராஜும் கோர்ட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் சற்றுமுன்னர் நீதிபதியிடம் வருண் ராஜேந்திரனின் கதையை திருடியதை ஒப்புக்கொண்ட முருகதாஸ் அவருடன் சமாதானமான செல்வதாகக் கூறி, அது தொடர்பான மனுவையும் நீதிபதி சுந்தரிடம் சமர்ப்பித்தார்.
அந்த மனுவில் ராஜேந்திரன் என்கிற வருண் ராஜேந்திரனுடன் தானும் படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸும் சமரசமாக செல்வதாக முடிவு செய்திருப்பதாகவும், வருண் ராஜேந்திரன் மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் கேட்டுக்கொண்டபடி ‘கதை- நன்றி வருண் ராஜேந்திரன்’ என்று போட ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.