
"நடிகன்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி "தொட்டால் பூ மலரும்" படத்தில் கதாநாயகனாக அறிமுகம் கொடுத்தவர் நடிகர் சக்தி வாசுதேவன்.
இதுவரை 10 படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்துள்ள சக்திக்கு சரியான தமிழ் பட வாய்ப்புகள் அமையாததால், மாற்றத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக்கொண்டுள்ளார்.
இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் நழுவி வந்த இவர் இப்போது தான் ஒரு சில சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்துள்ளார். இவரை பற்றிய ஒரு தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், சக்தி சில மாதங்களுக்கு முன் மதுரைக்கு சென்று அங்கு உள்ள அன்பு இல்லத்தில் வளரும் சிறுவர்களுடன் மிகவும் சகஜமாக பேசி, அவர்களுடன் விளையாடி விட்டு அனைவருக்கும் அன்பளிப்புகள் கொடுத்து மகிழ்வித்து வந்துள்ளார்.
அதில் ஒரு சிறுவனுக்கு போட்டோகிராபி மேல் அதிக ஆர்வம் உள்ளதை அறிந்து கொண்டு. தன்னுடைய கேமராவை கொடுத்து தன்னை ஒரு புகை படம் எடுத்து கொடுக்கும் படி சொல்லி புகைபடமும் எடுத்துக்கொண்டாராம். இந்த புகை படம் தற்போது மிகவும் வைரலாக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் சக்தி அனைவரின் மீதும் மிகவும் அன்புள்ளம் கொண்டவர் என்பது தெரிகிறது .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.