போயஸ் கார்டனில் ரூ.150 கோடியில் வீடு... மனைவியிடம் சவால் விட்ட தனுஷ்... ரஜினி முன்பே எடுத்த தீர்க்கமான முடிவு!

By Thiraviaraj RMFirst Published Jan 18, 2022, 12:43 PM IST
Highlights

நான் ஒன்றும் உங்கள் குடும்பத்தையோ, உங்கள் சொத்தையோ நம்பி இல்லை. எனது திறமையால் மட்டுமே வாழ்ந்து வருகிறேன். உங்களுக்கு போயஸ் கார்டனில் உள்ள வீட்டை விட நவீன வசதியுடன் இதே போயஸ் கார்டனில் வீடு கட்டி வசிப்பேன்

தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்தால் இடிந்து போய் கிடக்கிறது ரஜினி குடும்ப்ம். வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் இந்த விவகாரத்துக்கு பல்வேறு தரப்பினரும் பலகாராணங்களை சோசியல் மீடியாவில் வைத்து வருகின்றனர்.

தனுஷிற்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தாங்கள் பிரிவு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், புரிந்து கொள்ள தங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை எனவும் இருவரும் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

யூட்யூப்பில் வழக்கம் போல் திரை பிரபலங்கள் பற்றி கிசுகிசு சொன்ன நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், சமீபத்தில் தனுஷ் பற்றியும் கூறியிருந்தார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்ததால் வேறு வழியில்லாமல் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக ரஜினியே தன்னிடம் கூறியதாக தெரிவித்து இருந்தார். அதோடு 16 வருடங்கள் அவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்றதாக ஒரு பொடி வைத்து பேசியிருந்தார். விருப்பம் இல்லாமல் தான் இவர்களின் திருமணம் நடைபெற்றதாக இதனால் பலர் பேசினர். பல ஆண்டுகளாக இருந்த மனகசப்பு இன்று விரிசலாகி உள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் இது காரணமல்ல. அவர்கள் இருவரும் திருமணமாகி 16 ஆண்டுகள் சந்தோஷமாக தான் வாழ்ந்ததாகவும், சமீபத்தில் தான் இருவருக்கு இடையே பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தங்கமகன் படத்திற்கு பிறகு சமந்தாவுடன், தனுஷ் நெருக்கம் காட்டி வருவதாகவும், அதனால் ஐஸ்வர்யா - தனுஷ் இடையே மனகசப்பு உருவாகியதாகவும் கூறப்படுகிறது. 

அதோடு சமீபத்தில் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, சமீபத்தில் நடிகர் சிம்புவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்கு வாழ்த்து கூறி இருந்தார். ஏற்கனவே சிம்புவும், ரஜினியின் மகளும் காதலித்து வந்ததாக ஒரு வதந்தி பரவியது. சிம்புவுடனான காதல் முறிந்த பிறகு தான் ஐஸ்வர்யா, தனுஷ் திருமணம் நடைபெற்றதாகவும், ரஜினி மகளை திருமணம் செய்ய போகிறார் என்ற காரணத்தால் தான் ஆரம்பத்தில் சிம்பு, லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் சமீபத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது தான் தற்போதைய விவாகரத்து முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. 

தனுஷ் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கம் காட்டி வந்ததாகவும், அதில் சில குறிப்பிட்ட நடிகைகளுடம் இப்போது தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினிக்கு இரண்டே மகள்கள். இளைய மகள் சவுந்தர்யாவும் விவவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த பிறகே நிம்மதியானார் ரஜினி, இப்போது மூத்த மகளின் விவவாக்ரத்து அவரை மிகவும் மன வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு இடையே நடக்கும் பிரச்னை மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஏற்பட்டு விட்டது. இனியும் தனுஷை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதால், ஐஸ்வர்யா, போயஸ் கார்டனிலேயே யோகா செண்டரை ஆரம்பித்து  சம்பாதிக்கத் தொடங்கி விட்டார். தனுஷிடம் அவ்வளவு கோடிகள் இருந்தும், போயஸ் கார்டனை ஒட்டியுள்ள பகுதியில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு சொந்ந்தமான வீட்டில் செண்டிமெண்ட் கருதி மாதம் ஒன்றரை லட்சம் செலுத்தி வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே நடந்த பிரச்னயால் தனுஷ் மட்டும் அந்த வீட்டில் தனுயாகவே வசித்து வந்தார். 

அவ்வப்போது தீபாவளி, பொங்கல், பிறந்த நாளுக்கு ரஜினி வீட்டிற்கு வந்து சென்றார் தனுஷ். அடுத்து கோலிவுட், பாலிவுட், சர்வதே சினிமா என நடிக்கத் தொடங்கினார் தனுஷ். எவ்வளவோ முயற்சி செய்தும் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்த முயன்றாலும் ரஜினி மகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார்கள். 

இதனையடுத்தே, ‘’நான் ஒன்றும் உங்கள் குடும்பத்தையோ, உங்கள் சொத்தையோ நம்பி இல்லை. எனது திறமையால் மட்டுமே வாழ்ந்து வருகிறேன். உங்களுக்கு போயஸ் கார்டனில் உள்ள வீட்டை விட நவீன வசதியுடன் இதே போயஸ் கார்டனில் வீடு கட்டி வசிப்பேன்’’ என்று சவால் விட்டே தனுஷ் தற்போது அதே பகுதியில்  ரூ.150 கோடியில் வீடு கட்ட ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வீடு ரஜினி இல்லத்தை விட பிரம்மாண்டமாக அமைய வேண்டும் என்பதற்காக வெளி நாடுகளில் இருந்து கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை கப்பல் கப்பலாக இறக்கி வருகிறார்’’ என்கிறார்கள். 

ரஜினிக்கு பல கோடிகள் சொத்துக்கள் இருந்தாலும் தனது பேரன்கள் பெயரிலேயே மட்டும்தான் எழுதி வைப்பேன் என முன்பே கூறி விட்டார் என்பது பலரும் அறியாத தகவல். 


 

click me!