கண்ணீர்விட்டு அழுதபடி பேசிய அந்த வீடியோவில், ரசிகர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். படம் பார்ப்பதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என எந்த மாநிலத்திற்கு காலையில் சென்றிருந்தாலும் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். நம் மனதிலும், வாழ்க்கையிலும் இருக்கும் பிரச்சனைகளில் இருந்து வெளிவர தான் படம் பார்க்கிறோம். ஆனால் அந்த படம் பார்ப்பதே ஒரு சவாலான ஒன்றாக மாறியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். நானும் இதை எதிர்பார்க்கவில்லை.