பட வாய்ப்பை பிடிக்க கவர்ச்சியை கையில் எடுத்த ரித்திகா சிங்!

By manimegalai aFirst Published May 2, 2019, 2:28 PM IST
Highlights

பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா சிங்கை, கடந்த 2016 ஆம் ஆண்டு பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'இறுதி சுற்று' படத்தின் மூலம் தமிழ் மற்றும் இந்தியில் அறிமுகம் செய்தவர் பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா.
 

பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா சிங்கை, கடந்த 2016 ஆம் ஆண்டு பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'இறுதி சுற்று' படத்தின் மூலம் தமிழ் மற்றும் இந்தியில் அறிமுகம் செய்தவர் பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா.

முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருது, பிலிம் ஃபேர் விருது, உட்பட பல விருதுகளை பெற்றார். மேலும் சிறந்த ரீ-என்ட்ரிக்காக காத்திருந்த நடிகர் மாதவனுக்கும் இப்படம் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து, ரித்திகா சிங் விளையாட்டில் மட்டும்  இன்றி திரைப்படங்கள் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த 'ஆண்டவன் கட்டளை' , 'சிவலிங்கா' ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. தற்போது இவர் நடித்துள்ள 'வணங்காமுடி' என்கிற ஒரு படம் மட்டுமே தமிழில் இவர் கைவசம் உள்ளது.

நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவரும் இவர், பட வாய்ப்பை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். ஏற்கனவே பல்வேறு கவர்ச்சி உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வந்த ரித்திகா, தற்போது ஓவர் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் அதீத கவர்ச்சியில் இருப்பதை கண்டு நெட்டிசன்கள் சிலர் விமர்சிக்க துவங்கியுள்ளனர்.  

click me!