ரம்யா கேட்ட கேள்வியில் பிக்பாஸ்சே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரா...? கிண்டல் கேலியுடன் வெளியான புரோமோ!

By manimegalai aFirst Published Dec 18, 2020, 2:04 PM IST
Highlights

ரம்யாவை பிக்பாஸ் அழைத்து பேசியபோது,பிக்பாஸையே கன்ஃப்யூஸ் செய்து, சிரிக்க வைத்துவிட்டார் என ரம்யா பேசுவது தான் இரண்டாவது புரோமோவில் வெளியாகியுள்ளது. 
 

ரம்யாவை பிக்பாஸ் அழைத்து பேசியபோது,பிக்பாஸையே கன்ஃப்யூஸ் செய்து, சிரிக்க வைத்துவிட்டார் என ரம்யா பேசுவது தான் இரண்டாவது புரோமோவில் வெளியாகியுள்ளது. 

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் கன்பெக்சன் அறைக்கு ஒவ்வொரு போட்டியாளராக அழைத்து இந்த 70 நாள்களில் நீங்கள் இந்த வீட்டில் பெற்ற அனுபவம் என்ன? பிக்பாஸ் வீட்டின் வெளியே நீங்கள் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்பது குறித்த கேள்வியை கேட்டார் பிக்பாஸ்.

அந்த வகையில், ஷிவானி முதல் அர்ச்சனா வரை இந்த கன்பெக்சன் அறைக்கு வந்தவர்கள் எல்லோரும் ஒரு கட்டத்தில் கதறி அழுதார்கள் என்பது நாம் அறிந்தது தான்.

ஆனால் சற்றுமுன் கன்பெஷன் அறைக்கு சென்ற ரம்யா உள்ளேயும் வெளியேயும் சிரித்தபடியே உள்ளார். பிக்பாஸ் ரம்யாவிடம் இந்த பிக்பாஸ் வீட்டில் வாழ்க்கை எப்படி இருந்தது என்று கேட்டபோது ’எனக்கு யாரிடமாவது பிடிக்கவில்லை என்றால் நான் அவரிடத்தில் இருந்து விலகி கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் செய்வேன் என்றும் அதே இடத்தில் இருக்க மாட்டேன் என்றும் ரம்யா கூறினார்.

அதனை அடுத்து கோவம் பற்றி எழுப்பிய கேள்விக்கு ’எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அந்தந்த நேரத்தில் அதை எல்லாம் பண்ணி கொண்டிருப்பேன் என்றும், அழுகை என்கிற கேள்விக்கு, அழுகையில் உண்மை இருப்பதையும், பொய் இருப்பதையும்  என இரண்டும் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் திடீரென ரம்யா ’பிக்பாஸ் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என்று கேட்க அதற்கு பிக்பாஸ், ‘நான் கேட்கும் கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள்’ என்று கூறுகிறார். இதனை அடுத்து கன்பெக்சன் அறையில் இருந்து சிரித்துக்கொண்டே ரம்யா வெளியே வர ரம்யாவை கிண்டல் செய்வது போல்,  ’பிக்பாஸையே கன்ஃப்யூஸ் செய்து அவரையே சிரிக்க வைத்தவர் ரம்யா பாண்டியன் என்று செய்தி வாசிப்பது போல கூறியுள்ளார். 

இந்த புரோமோ இதோ...

of - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/kgufpS13tc

— Vijay Television (@vijaytelevision)

click me!