‘அப்பா வேஷமா ஆளைவிடுங்க’...கரகாட்டக்காரன் 2’வின் கதையை முடித்த ராமராஜன்...

Published : Jun 06, 2019, 02:31 PM ISTUpdated : Jun 06, 2019, 02:32 PM IST
‘அப்பா வேஷமா ஆளைவிடுங்க’...கரகாட்டக்காரன் 2’வின் கதையை முடித்த ராமராஜன்...

சுருக்கம்

கொஞ்சம் விட்டிருந்தால் திரிஷா, திவ்யா, நயன்தாராக்களை ஜோடியாகக் கேட்டிருப்பாரோ என்னவோ, கரகாட்டக்காரன் 2வில் அப்பா வேஷத்திலெல்லாம் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம் நடிகர் ராமராஜன்.

கொஞ்சம் விட்டிருந்தால் திரிஷா, திவ்யா, நயன்தாராக்களை ஜோடியாகக் கேட்டிருப்பாரோ என்னவோ, கரகாட்டக்காரன் 2வில் அப்பா வேஷத்திலெல்லாம் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம் நடிகர் ராமராஜன்.

இரு வாரங்களுக்கு முன்பு இயக்குநர் கங்கை அமரன் ‘கரகாட்டக்காரன்’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்கவிருப்பதாகவும் அதில் ராமராஜன் கனகா, கவுண்டமணி,செந்தில் போன்றவர்களை முதல் தலைமுறையாகக் காட்டிவிட்டு அவர்களது மூன்றாவது தலைமுறையைக் கொண்டு நிகழ்காலக் கதையை நகர்த்தவிருப்பதாகவும் பேட்டி அளித்திருந்தார்.

ஆனால் கங்கை அமரனின் முயற்சிக்கு முதல் முடுக்கட்டையை முன்னாள் கதாநாயகன் ராமராஜனே போட்டுவிட்டாராம். ‘எம்.ஜி.ஆர் எத்தனை வயசு வரைக்கும் ஹீரோவா நடிச்சார்ங்குறது மறந்துபோச்சா? அப்பாவா, தாத்தாவா நடிக்கணும்னு தயவு செஞ்சு என்கிட்ட வராதீங்க’என்று கறாராக சொல்லிவிட்டாராம். அப்புறம் என்ன படத்தைக் கிடப்பில் போடும் முடிவில் இருக்கிறாராம் கங்கை அமரன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!