அரைசதம் அடித்த அண்ணாத்த!! மகிழ்ச்சியில் பஞ்ச் டயலாக் பேசி.... படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ரஜினி

By Ganesh PerumalFirst Published Dec 24, 2021, 4:10 PM IST
Highlights

அண்ணாத்த (Annaatthe) படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ள நிலையில், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி (Rajini) அவர்களுக்கு தங்க செயின் பரிசாக அளித்தார்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்தது. சுமார் 200 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், அண்ணாத்த (Annaatthe) படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் டி இமான், ஒளிப்பதிவாளர் வெற்றி, இயக்குனர் சிவா உள்பட படக்குழுவினர் சிலரை தனது இல்லத்துக்கு அழைத்து, அவர்களுக்கு தங்க செயின் பரிசாக அளித்துள்ளார். ரஜினியின் இந்த திடீர் கிஃப்டால் இன்ப அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இதையடுத்து ஹூட் செயலியில் அண்ணாத்த (Annaatthe) படம் 50 நாட்களை கடந்துள்ளது குறித்து ஆடியோ மெசேஜ் ஒன்றை பதிவிட்டுள்ளார் ரஜினி. அதில் அவர் பேசியதாவது: “கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல தடைகளைக் கடந்து, 2 ஆண்டுகளுக்கு மேலாக நிறைய சிரமங்களுக்கு இடையே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. படம் ரிலீசானதும் மழை வந்து குறுக்கிட்டது. எதிர்மறை விமர்சனங்களும் அதிகம் வந்தன. 

இவற்றையெல்லாம் கடந்து 'அண்ணாத்த' படம் வெற்றி அடைந்துள்ளது. மழை இல்லை என்றால் இந்தப் படம் இன்னும் பெரிய வெற்றியை பெற்றிருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது பாட்ஷா படத்தில் நான் பேசிய டயலாக் தான் நினைவுக்கு வருகிறது. ‘ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான். ஆனா கெட்டவங்கள...’ என்று கூறி சிரித்தபடி பேசி முடித்திருக்கிறார் ரஜினி. 

click me!