ரஜினியின் இரண்டாவது மகளின் இரண்டாவது திருமணம்! பிப்ரவரியில் டும் டும் டும்!

By manimegalai aFirst Published Jan 23, 2019, 11:59 AM IST
Highlights

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கு பிப்ரவரி 10  ஆம் தேதி இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. 
 

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கு பிப்ரவரி 10  ஆம் தேதி இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. 

ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப்பிரமாண்டமாக திருமணம் நடந்தது. பின் தன்னுடைய மகனை பெற்று எடுக்க அம்மாவின் வீட்டுக்கு வந்த சௌந்தர்யா... கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பெற்றோருடன் தங்கி விட்டார். ஆரம்பத்தில் இவர்களை  சேர்ந்து வைக்க பலர் போராடியும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

சௌந்தர்யா மற்றும் அவருடைய கணவர் அஸ்வின் இருவரும் மனமுவந்து இந்தப் பிரிதலை விரும்புவதாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

தற்போது சௌந்தர்யா தன்னுடைய மகன் வேத்துடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.  விவாகரத்துக்கு பின் தன்னுடைய கவனம் முழுவதையும் திரைப்படங்கள் இயக்குவது, அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது போன்ற வேலைகளில் செலுத்தினார்.

இந்நிலையில் தற்போது, சௌந்தர்யா ரஜினிகாந்த் கோவை தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன் என்பவரை சௌந்தர்யா, காதலித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் இவர்களுடைய காதலுக்கு இரண்டு வீட்டு தரப்பினரும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில்,  தற்போது விசாகனுக்கும் - சௌந்தர்யாவிற்கும், பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி, திருமணம் நடைபெற உள்ளதை உறுதி செய்துள்ளனர்.  இதனால் சௌந்தர்யாவிற்கு பலர் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.   

click me!