
தமிழ் திரையுலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரத்பாபு. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்பாபு, செப்சிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த அரியவகை நோய் பாதிப்பால் அவரது உடல் உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கின.
இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரத்பாபு மறைவால் தமிழ், தெலுங்கு திரையுலகினர் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சரத்பாபுவின் மறைவுக்கு அவரின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : ‘இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியும், சரத்பாபுவும் முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து, நெற்றிக்கண், வேலைக்காரன், பாபா போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.