திரையுலகில் அதிர்ச்சி..! மாரடைப்பால் பிரபல கலை இயக்குனர் T.சந்தானம் மரணம்..!

By manimegalai aFirst Published Oct 24, 2022, 10:05 AM IST
Highlights

தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனராக அறியப்படும் T.சந்தானம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம். திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் தத்ரூபமாக, சுமார் 18 செட்டுகளை உருவாக்கி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும், திரையுலகினர் கவனத்தையும் ஈர்த்தவர் கலை இயக்குனர் T. சந்தானம். இந்த படத்தை தொடர்ந்து, பல முன்னணி நடிகர்கள் படங்களில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதிலும் குறிப்பாக பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின், ஆஸ்த்தான கலை இயக்குனர்களின் இவரும் ஒருவர். சமீப காலமாக இவர் இயக்கத்தில் வெளியான விஜய்யின் சர்க்கார், ரஜினிகாந்தின் தர்பார் மற்றும் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் கௌதம் கார்த்தியை வைத்து இயக்கி வரும் 1947 ஆகிய படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

மேலும் தெய்வமகள், டிமான்டி காலனி, இறுதிச்சுற்று, ஜகமே தந்திரம், மகான், போன்ற பல படங்களில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கலை இயக்குனர் T.சந்தானம் மரணம் அடைந்து விட்டதாக, தகவல்கள் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

click me!