
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் தத்ரூபமாக, சுமார் 18 செட்டுகளை உருவாக்கி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும், திரையுலகினர் கவனத்தையும் ஈர்த்தவர் கலை இயக்குனர் T. சந்தானம். இந்த படத்தை தொடர்ந்து, பல முன்னணி நடிகர்கள் படங்களில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
அதிலும் குறிப்பாக பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின், ஆஸ்த்தான கலை இயக்குனர்களின் இவரும் ஒருவர். சமீப காலமாக இவர் இயக்கத்தில் வெளியான விஜய்யின் சர்க்கார், ரஜினிகாந்தின் தர்பார் மற்றும் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் கௌதம் கார்த்தியை வைத்து இயக்கி வரும் 1947 ஆகிய படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
மேலும் தெய்வமகள், டிமான்டி காலனி, இறுதிச்சுற்று, ஜகமே தந்திரம், மகான், போன்ற பல படங்களில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கலை இயக்குனர் T.சந்தானம் மரணம் அடைந்து விட்டதாக, தகவல்கள் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.