ரஜினிக்காக ஒரு நாட்டையே உருவாக்கிய ஷங்கர்......!!!

 
Published : Nov 30, 2016, 08:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
ரஜினிக்காக ஒரு நாட்டையே உருவாக்கிய ஷங்கர்......!!!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த்வரும் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு மெலடி பாடலை உக்ரைன் நாட்டில் படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டிருந்தார். 

ஆனால் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த பாடலை இந்தியாவில் படமாக்கி கிராபிக்ஸ் மூலம் உக்ரைன் பின்னணியை ஷங்கர் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்காக கிராபிக்ஸ் வல்லுனர்கள் இரவுபகலாக பணிபுரிந்து வருகிறார்களாம்.
 
வரும் 2017ஆம் ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 80% முடிவடைந்துவிட்டதாகவும், விரைவில் 100% படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணி தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 மினிட்ஸ் பிக்பாஸ் என்று கேட்ட மகள்கள்: சந்தோஷத்தில் திகைத்து நின்ற சாண்ட்ரா! அழ வைக்கிறீங்களேப்பா!
ஹாலிவுட் லெஜண்ட் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த தரமான சம்பவம்... 'தி ஒடிஸி' டிரெய்லர் இதோ