12.12.2018...நாளை மற்றுமொரு நாளே... எதுவும் அறிவிக்கமாட்டார் ரஜினி 68’

By vinoth kumarFirst Published Dec 11, 2018, 3:00 PM IST
Highlights


அரசியல் எண்ட்ரி குறித்து இன்னும் சில காலங்களுக்கு மவுனமாக இருக்கவிரும்பியே ரஜினி‘பேட்ட’ விழாவில் ‘நான் பிறந்தநாளன்று வீட்டில் இருக்கமாட்டேன். கடந்த ஆண்டு போலவே தேவையில்லாமல் வீட்டுக்கு வந்து ஏமாற வேண்டாம்’ என்று அறிவித்தது.

’படிக்காதவன்’படத்தில் விவேக் தனது அசிஸ்டெண்டுகளை நோக்கி ‘இதுவரைக்கும் நான் உங்களுக்கு எதாவது நல்லது பண்ணியிருக்கேனா? என்று கேட்டுவிட்டு, ‘பண்ணலையில்லை.இனியும் அப்பிடித்தான்’ என்பார். அதுபோலவே ரஜினி நாளை வரவிருக்கும் தனது இந்த பிறந்தநாளன்றும் தனது அரசியல் பிரவேசம் குறித்து  எதுவும் அறிவிக்கமாட்டார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

அரசியல் எண்ட்ரி குறித்து இன்னும் சில காலங்களுக்கு மவுனமாக இருக்கவிரும்பியே ரஜினி‘பேட்ட’ விழாவில் ‘நான் பிறந்தநாளன்று வீட்டில் இருக்கமாட்டேன். கடந்த ஆண்டு போலவே தேவையில்லாமல் வீட்டுக்கு வந்து ஏமாற வேண்டாம்’ என்று அறிவித்தது. அதை ஒட்டி வெக்ஸ் ஆன ரசிகர்கள் நம்மை சந்திக்காவிட்டாலும் கூட தலைவர் என்னத்தையாவது கண்டிப்பாக அறிவிப்பார் என்று வழக்கம்போலவே இன்னும் நம்புகிறார்கள்.

இந்நிலையில் ‘நிறைய பேர் சேர்த்து எதிர்த்தா யார் பலசாலி? என்று அவரால் சுட்டிக்காட்டப்பட்ட மோடி 5 மாநிலங்களில் மண்ணைக் கவ்வி இருப்பது அவரை மேலும் அப் செட் ஆக்கியிருக்கும். இந்த சமயத்தில் மீடியாவை சந்தித்தால் அவர்கள் கண்டிப்பாக ‘அந்த 5 மாநிலம்’ என்று மைக்கை நீட்ட ரஜினி ‘எந்த 5 மாநிலம்?’ என்று கேட்கவேண்டி வந்தாலும் வரலாம். எனவே ரஜினியின் நாளைய 68 வது பிறந்த நாள் ‘நாளை மற்றுமொரு நாளே’.

click me!