மோடி பாணியில் கலக்கிய ரஜினி... விருதை பெற்று உருக்கம்..!

Published : Nov 20, 2019, 05:36 PM IST
மோடி பாணியில் கலக்கிய ரஜினி... விருதை பெற்று உருக்கம்..!

சுருக்கம்

கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவதை முன்னிட்டு நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்ட நிகழ்வு இந்திய அளவில் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளன.

கோவாவில் நடைபெறும் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.  நவம்பர் 20 தொடங்கி வருகிற 28-ம் தேதி வரை 9 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த திரைப்பட விழாவில் அமிதாப் பச்சனுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருதும், ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ என்ற மத்திய அரசின் சிறப்பு விருது ரஜினிக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட ரஜினி, முதலில் ஆங்கிலத்தில் பேசிவிட்டு,  ‘என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு எனது நன்றிகள்’என்றும் அவர்களுக்கு விருதை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

76 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்களும், இந்திய மொழிகளைச் சேர்ந்த 41 படங்களும் திரையிடப்படவுள்ள இந்த விழாவை நடத்துவது மத்திய அரசு என்பதும், இவ்விழாவில் பார்த்திபன் இயக்கி, நடித்த ஒத்த செருப்பு மற்றும் லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஹவுஸ் ஓனர் ஆகிய 2 படங்களும் திரையிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மோடி தமிழகம் வந்தால் தமிழில் பேசி விட்டு ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசுவார். ஆனால் ரஜினி மோடி பாணியை பின்பற்றி ஆங்கிலத்தில் பேசிவிட்டு தமிழில் பேசி அசத்தி இருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?