8 ஆண்டுகளுக்கு பின் ரசிகர்களை சந்தித்த ரஜினி... புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வம்

Asianet News Tamil  
Published : May 15, 2017, 09:53 AM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
8 ஆண்டுகளுக்கு பின் ரசிகர்களை சந்தித்த ரஜினி... புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வம்

சுருக்கம்

rajini meeting with fans after 8 years

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்திக்கிறார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். பார்கோடுடன் கூடிய பிரத்யேக அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரஜினிகாந்தை சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். மாவட்டத்திற்கு 200 வீதம் 600 ரசிகர்களை சந்திக்க உள்ளார். 

மேலும், 15ந்தேதி முதல் 19ந்தேதி வரை 4 நாட்களுக்கு சென்னையில் ரசிகர்களை சந்திக்க ரஜினி முடிவெடுத்துள்ளார். ரஜினியை சந்திக்க வருபவர்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல்  தொடர்ந்து 5 நாட்கள் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார். 

சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க உள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

18 லட்சத்தோடு பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய பிரபலம்... அவசரப்பட்டுட்டியே தலைவா என குமுறும் ரசிகர்கள்
தலைகீழாக மாறிய டாப் 10 சீரியல் டிஆர்பி ரேட்டிங்... சன் டிவிக்கு சம்மட்டி அடி கொடுத்த விஜய் டிவி..!