
மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது பாகுபலி படத்தின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ள புதிய சரித்திர படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த திரைப்படம் 18 அல்லது 19-ஆம் நூற்றாண்டில் நடந்த சரித்திரக் கதையாம். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கிறது.
இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் சொன்னது:
“தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு இந்த கதை எழுதப்பட்டுள்ளதால், படத்தின் ஹீரோ கதாபாத்திரத்திற்கு நான் பொறுத்தமாக இருப்பேன் என என்னிடம் விஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.
மேலும், கதையின் ஒன் லைனை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. எனவே உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
தற்போது படத்தின் கதையை முழுவதுமாக எழுதி முடிக்கும் பணியில் விஜேந்திர பிரசாத் ஈடுபட்டு வருகிறார்.
இது மிகப்பெரிய கதை என்பதால் இரண்டு பாகங்களாக திரைப்படம் உருவாக்கப்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.