சுப்ரமணியபுரம் பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை…பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு ...சிங்கப்பூர் தப்பி ஓட்டமா?

 
Published : Nov 22, 2017, 07:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
சுப்ரமணியபுரம் பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை…பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு ...சிங்கப்பூர் தப்பி ஓட்டமா?

சுருக்கம்

producer asokekumar sucide

சுப்ரமணியபுரம் பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை…பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு ...சிங்கப்பூர் தப்பி ஓட்டமா?

சுப்ரணியபுரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும், இயக்குநர் சசிகுமாரின் மைத்துனருமான அசோக்குமார், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, சினிமா பைனான்சியர்  மதுரை அன்புசெழியன் மீது இபிகோ 306 பிரிவின் கீழ் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்புசெழியன் சிங்கப்பூர் தப்பிஓட முயற்சி செய்வதாக தகவல்கள்கள் வெளியாகியுள்ளன.

மெளனராகம், நாயகன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த மிகப் பெரிய தயாரிப்பாளர் ஜிவி என அழைக்கப்படும் ஜி,வெங்கடேஸ்வரன். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். தற்போது அதே கந்துவட்டி கொடுமையால் மேலும் ஒரு தற்கொலையை சந்தித்திருக்கிறது தமிழ் திரையுலகம்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சசிகுமாரின் படத் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்சன்ஸ் . நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்த அசோக்குமார் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவர் சசிகுமாரின்  அத்தை மகன் உறவும் கூட. 

சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆற்காடு சாலை தனியார் அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருந்த அசோக்  திடீரென நேற்று வீட்டில்  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கந்துவட்டியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை பைனான்சியர் அன்பு செழியனிடம் வாங்கிய பணத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பல லட்சங்கள் வட்டியாக கொடுத்திருந்தும் தொடர்ந்து கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் கேவலமாக அன்பு செழியின் மிரட்டுவதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

தான் மட்டுமல்லாமல் இயக்குநர் சசிகுமாரும் அன்புசெழியனால் மிரட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இயக்குநர் சசிகுமார், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இயக்குநர்கள் அமீர், கரு.,பழனியப்பன் உள்ளிட்ட இயக்குநர்களும் சசிகுமாருடன் சென்று புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் பைனான்சியர் மதுரை அன்புசெழியன் மீது இபிகோ 306 செக்சன்படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் அன்பு செழியன் தலைமறைவாகிவிட்டதாகவும், இன்று மதுரையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் தப்பிச் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!