BiggBoss Tamil 5: சுக்கு நூறாக உடைகிறதாமூவர் அணி? பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் பிரியங்கா! புரோமோ

By manimegalai aFirst Published Dec 3, 2021, 12:36 PM IST
Highlights

எந்த பிரச்சனை வந்தாலும், யாரையும் விட்டு கொடுக்காமல் விளையாடி வந்த மூவர் அணிக்குள்ளேயே இன்று பிரச்சனை எட்டி பார்த்துள்ளது. இது குறித்த புரோமோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

எந்த பிரச்சனை வந்தாலும், யாரையும் விட்டு கொடுக்காமல் விளையாடி வந்த மூவர் அணிக்குள்ளேயே இன்று பிரச்சனை எட்டி பார்த்துள்ளது. இது குறித்த புரோமோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் வீடு என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க, வாய்ப்பே இல்லை. எந்த ஒரு டாஸ்க் நடந்தாலும் அதனால் கண்டிப்பாக ஒரு பிரச்சனை வெடித்து விடும். அந்த வகையில் தான் தற்போது நிரூப், ப்ரியங்கா, அபிஷேக் ஆகிய மூவருக்கும் பிரச்சனை கொழுந்து விட்டு ஏறியே ப்ரியங்கா குறும்படம் போட சொல்வதோடு, பிக்பாஸ் வீட்டை விட்டே வெளியேறும் முடிவை எடுத்துள்ளார். இந்த புரோமோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: அதிர்ச்சியில் திரையுலகம்... கால் தவறி கீழே விழுந்த பிரபல நடிகர் கோமாவிற்கு சென்ற பரிதாபம்..!

 

அதாவது சில தினங்களாக பிக்பாஸ் வீட்டில் பிரேக்கிங் நியூஸ் டாஸ்க் நடந்து வந்தது. இந்த டாஸ்க் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், டாஸ்க் நடக்கும் போது... நிரூப்பை அபிஷேக், ப்ரியங்கா உள்ளிட்டோர் செம்மையாக கலாய்த்தனர். இதனால் கடுப்பான நிரூப் தன்னுடைய பொறுமையை இழந்து ப்ரியங்காவிடம் ‘என்னை நீங்கள் இஷ்டத்துக்கு கலாய்த்துக் கொண்டிருந்தீர்கள். இந்த டாஸ்க் முழுவதுமே என்னை ஏன் கலாய்த்தீர்கள். நான் வேண்டாம்... வேண்டாம்... என்று சொன்னபோதும் தொடர்ச்சியாக ஏன் கலாய்த்து கொண்டிருக்கின்றீர்கள்’ என மிகவும் ஆவேசமாக பேசுகிறார்.

மேலும் செய்திகள்: Tamannaah: ஸ்ட்ராப் லெஸ் மேலாடை... அந்த இடத்தை ஹைலைட் செய்து காட்டி... இளம் நெஞ்சங்களை பக் பக் ஆக்கிய தமன்னா!

 

பிரியங்காவை நிரூப் திட்டியதை பார்த்த அபிஷேக்,  நான் தான் உன்னை கலாய்தேன் உனக்கு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் வந்து கேள்வி கேள், ஏன் அவளிடம் கத்திக் கொண்டு இருக்கிறாய்? என்று கேட்க, அதற்க்கு ப்ரியங்கா... ’நாங்கள் கலாய்ப்பது போல் உனக்கு தெரிந்தால் வாயைத் திறந்து சொல்ல வேண்டியது தானே என்று கூறிய அவர் சிபி யுடன் நாங்கள் உட்கார்ந்து உன்னை கலாய்ப்போம் என்று டிஸ்கஸ் செய்தபோது அப்போதே நீ சொல்லி இருக்கலாமே. என் மேல் குற்றம் இருந்தால் நான் வெளியே போகவும் தயார்... என கூறி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளார். மேலும் இது குறித்த குறும்படத்தையும் போட வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறார்.

மேலும் செய்திகள்: பாம்பு டாட்டூ குத்தி பதற வைத்த ஓவியா..! வேற இடமே கிடைக்கல போல... வைரலாகும் வீடியோ!!

 

இதுவரை யாராலும் பிரிக்க முடியாத அணியாக விளையாடி கொண்டிருந்த நிரூப், ப்ரியங்கா, அபிஷேக் ஆகியோருக்கும் பிரச்சனை வந்துள்ளதால் இந்த மூவர் அணி பிரிந்து விட்டதாக பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இது குறித்த புரோமோ இதோ...

#Day61#Promo1 of - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/rzEj8dEIvl

— Vijay Television (@vijaytelevision)

click me!