
நடிகை பிரியங்கா சோப்ரா கொசுவலையில் தைத்தது போல் ஒரு உடையை அணிந்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து, நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.
முன்பெல்லாம் திருமணம் ஆகி விட்டால் திரையுலகை விட்டு நடிகைகள் முழுமையாக விலகா விட்டாலும், சிறிது காலம் விலகி இருப்பார்கள். ஆனால் தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், திருமணத்திற்கு பின்பு தான் அதிக கவர்ச்சியுடன் உடைகள் அணிவதை நடிகைகள் வழக்கமாக கொண்டுள்ளனர் என நெட்டிசன்கள் சமீப காலங்களாக சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
அவர்கள் சொல்வதை உண்மையாகும் விதமாக, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரது விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இந்த புகைப்படத்தில், கருப்பு நிற கொசுவலை போல் மெட்டீரியலால் ஆன உடை அணிந்துள்ளார். ஆபாசமாக இருக்கும் இந்த உடையை பலர் கலாய்த்து, விமர்சித்தும் வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.