
'சின்னத்தம்பி' சீரியல் மூலம், பலரது ஃபேவரட் நடிகராக மாறியவர் ப்ரஜின். இவரின் மனைவி சாண்ட்ரா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது இந்த நட்சத்திர தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வரும் நட்சத்திர தம்பதி ப்ரஜின் மற்றும் சாண்ட்ரா. ப்ரஜின் கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் மனைவி சாண்ட்ரா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த தருணத்திற்காக 10 வருடம் காத்திருந்ததாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பலர் சாண்ட்ரா மற்றும் ப்ரஜின் ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வந்தனர். சிலர் ஏன், குழந்தை பெற்று கொள்ள பத்து வருடங்கள் ஆகியது என்பது போன்ற சில கேள்விகளையும் முன்வைத்தனர்.
இதற்கு சாண்ட்ரா, அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்... "நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டதால், பண உதவி மற்றும் ஆறுதல் சொல்ல கூட துணைக்கு யாருமே இல்லை. எங்களிடம் இருந்த சில பழைய உடைகளை மட்டுமே கொண்டுவந்து தான் எங்கள் வாழ்க்கையை துவங்கினோம்.
எங்களை காப்பாற்றி கொள்ள இத்தனை வருடங்கள் வேலை, வேலை என ஓடியதால் குழந்தை பற்றி யோசிக்க முடியவில்லை. ப்ரஜின் வேலை இன்றி சில காலம் இருந்தார். தற்போது சின்னத்தம்பி சீரியல் மூலம் அவருக்கு நல்ல பிரேக் கிடைத்துள்ளதால், நாங்கள் குழந்தை பெற முடிவெடுத்தோம்" என சாண்ட்ரா விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் இவர்களின் காத்திருப்புக்கு இரட்டை சந்தோஷத்தை அல்லி கொடுப்பது போல், இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.