
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'சுமங்கலி' தொடரில் ஹீரோவாக நடித்து வரும் பிரதீப் சில நாட்களுக்கு முன், ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது கை, கால், முதுகு மற்றும் சில இடங்களில் காயங்களும், ரத்தக்கட்டுகளும் இருந்ததாக கூறி , அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரதீப்பின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர், தற்போது பிரதீப்பின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில், கணவன் மனைவிக்குள் நடத்த சண்டையின் போதும், பிரதீப் அதிக அளவில் குடித்து விட்டு கீழே விழுந்து காயம் ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாகவும்.
மற்ற படி அவருடைய மரணத்தில் மர்மம் இல்லை என்றும், அவர் தற்கொலை செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
இதனால் தன்னுடைய மகன் ஏன் தற்கொலை செய்து கொண்டான் என ஷாக்கில் இருக்கின்றனராம் பிரதீப்பின் பெற்றோர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.