
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நாகினி' என்கிற தொடர் மூலம், இல்லத்தரசிகள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தவர் 'மௌனி ராய்'.
தற்போது இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில், நடித்து வருகிறார். இவருக்கு இளைஞர்களிடம் இருந்த வரவேற்பை பார்த்து ஒரு சில கோலிவுட் தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் இயக்க முயற்சி செய்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் 'பிக் பாஸ் 10 ' நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்ட இவர், சல்மான்கானை வெகுவாக கவர்ந்து விட்டாராம்.
இதனால் அடுத்ததாக சல்மான் கான் தயாரிக்கும் படத்தில் இவரை தான் ஹீரோயினாக அறிமுகம் செய்யவுள்ளார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே சல்மான் கான், ஜீரா கான், சோனாக்க்ஷி சின்ஹா, ஆதித்யா ஷெட்டி, டெய்சி ஷா, ஆகியோரை அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.