க்ரைம் ரேட் கூடிட்டே போகுதே பவர் ஸ்டார்.

First Published Jun 28, 2017, 3:23 PM IST
Highlights
power star crime issue


கடந்த மார்ச் மாதம் டெல்லியை சேர்ந்த தயாரிப்பாளர்கள் இருவரிடம் பத்து கோடி ரூபாயை பவர் ஸ்டார் சீனிவாசன் ஏமாற்றிவிட்டார் என்பதற்காக மோசடி வழக்கில் அவரை கைது செய்தனர். அதன்பின் அவர் பிணையில் வெளிவந்தார். அந்த வழக்கே முடியாத நிலையில் மீண்டும் பவர் ஸ்டார் இன்னொரு மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த மசூர் அலாம் மற்றும் சாஜித் வாஹாப் என்பவர்கள் பவர் ஸ்டாரின் மீது முப்பது கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி கமிஷன் தொகையாக ஒரு கோடி வாங்கி ஏமாற்றிவிட்டார் என்று மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். கடனும் வாங்கித் தரவில்லை கமிஷனாக வாங்கிய ஒரு கோடியும் திருப்பித் தரவில்லை என்பதே அதன் சாராம்சம். 

click me!