
கடந்த மார்ச் மாதம் டெல்லியை சேர்ந்த தயாரிப்பாளர்கள் இருவரிடம் பத்து கோடி ரூபாயை பவர் ஸ்டார் சீனிவாசன் ஏமாற்றிவிட்டார் என்பதற்காக மோசடி வழக்கில் அவரை கைது செய்தனர். அதன்பின் அவர் பிணையில் வெளிவந்தார். அந்த வழக்கே முடியாத நிலையில் மீண்டும் பவர் ஸ்டார் இன்னொரு மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த மசூர் அலாம் மற்றும் சாஜித் வாஹாப் என்பவர்கள் பவர் ஸ்டாரின் மீது முப்பது கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி கமிஷன் தொகையாக ஒரு கோடி வாங்கி ஏமாற்றிவிட்டார் என்று மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். கடனும் வாங்கித் தரவில்லை கமிஷனாக வாங்கிய ஒரு கோடியும் திருப்பித் தரவில்லை என்பதே அதன் சாராம்சம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.