காமராசரிடம் 'இன்னிசை ராணி' என்று பட்டம் பெற்ற பிரபல பாடகி காலமானார்..!

First Published Jul 15, 2018, 11:32 AM IST
Highlights
popular singer rani death


முன்னால் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மற்றும் முதலமைச்சர் காமராசர் ஆகியோர் முன்னிலையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி பாராட்டுக்களை பெற்றவர் ராணி. இவரது குரலை கேட்டு காமராசர் இவருக்கு 'இன்னிசை ராணி' என்ற பட்டதை வழங்கினார்.

தற்போது 75 வயதாகும் இவர் சில மாதங்களாக, உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார்.

8 வயதில் தெலுங்கு திரைப்படமான 'ரூபவாஹினி' என்கிற படத்தில் பாட தொடங்கிய இவர், இதை தொடந்து மலையாளம், இந்தி, தமிழ், சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 

குறிப்பாக தமிழில் இவர் 'தேவதாஸ்' படத்தில் பாடியா 'எல்லாம் மாயை தானா... பாடல் மிகவும் பிரபலம். மேலும் இலங்கை நாட்டின் தேசிய கீதத்தை பாடியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!