
'நெஞ்சில் ஒரு முள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். இந்த படத்தை தொடர்ந்து கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, டார்லிங் டார்லிங், உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்தார். தமிழை தவிர, மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
நடிப்பை தாண்டி, ஆராரோ ஆரிராரோ, அம்மா வந்தாச்சு, வேட்டிய மடிச்சிக்கட்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், பிரபல இயக்குனர் கே.பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின், திரையுலகை விட்டு விலகிய பூர்ணிமா... கடந்த சில வருடங்களாக, ஹீரோக்களின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்கள் வீட்டில் நிகழ்ந்துள்ள மரண சம்பவம், குடும்பத்தினரையே மிக பெரிய துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பூர்ணிமா ஜெயராமின் அம்மாவும், பாக்யராஜின் மாமியாருமான, சுப்புலட்சுமி ஜெயராம் வயது முதிர்வு காரணமாக, தன்னுடைய 85 வயதில் இன்று காலை மரணமடைந்துள்ளார். இதனால் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் சோகத்தில் உள்ளனர்.
ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து இவர்களுக்கு தங்களுடைய இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.