EXCLUSIVE : வனிதா மகளை பக்குவமா பேசி விசாரிக்கும் போலீசார்..! பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் பரபரப்பு நிகழ்வு..!

By ezhil mozhiFirst Published Jul 3, 2019, 6:50 PM IST
Highlights


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களும் ஒருவரான வனிதா, தனது 3 ஆவது மகளான ஜெனிதாவை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் 

EXCLUSIVE :வனிதா மகளை பக்குவமா பேசி விசாரிக்கும் போலீசார்..! பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் பரபரப்பு நிகழ்வு..! 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களுள் ஒருவரான வனிதா, தனது 3 ஆவது மகளான ஜோவித்தாவை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் என அவருடைய இரண்டாவது கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

அதன் அடிப்படையில், ஆனந்த் ராஜ் உடன் child welfare officer மற்றும் தெலுங்கானா காவல் ஆய்வாளர் ஒருவரும் சென்னை நசரத் பேட்டை காவல் நிலையம் வந்தடைந்தனர்.பின்னர் புகாரின் அடிப்படையில், வனிதாவை விசாரணை நடத்தியே ஆக வேண்டும் என தெலுங்கானா போலீசார் உறுதியாக இருந்ததால், இன்று காலை வனிதாவிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன் படி, இன்று மாலை 5 மணிக்கு, வனிதாவின் மகளை வரவைத்து, ஒப்புதல் வாக்கு மூலம் வாங்க திட்டமிட்டனர்.

அதன் படி, தற்போது வனிதாவின் மகள் ஜோவிதாவுடன் தெலுங்கானா போலீசார் மற்றும் மனித உரிமை ஆணையத்திலிருந்து அதிகாரி ஒருவர், நசரத் பேட்டை போலீசார் கூட்டாக அமர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்து வருகின்றனர். விசாரிக்கும் போது வனிதா உடன் இல்லை.. அனந்த் ராஜும் வெளியில் நிற்க வைத்துவிட்டு ஜோவித்தாவிடம் விசாரித்து வருகின்றனர். 

விசாரணையின் முடிவிலேயே, ஜோவித்தா தன் தாயுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா ..? அல்லது தந்தை ஆனந்த் ராஜ் உடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா என்பது தெரிய வரும். 

click me!