
Singer Lakshmi Ammal Passes Away : தமிழ் சினிமாவில் கிராமிய இசைக்கு உயிரூட்டிய மூத்த நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் (75) இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், தென் மாவட்டங்களில் மேடை நிகழ்ச்சிகள் வழியாகப் பெரும் புகழ் பெற்ற ஒரு முக்கியமான நாட்டுப்புறக் கலைஞராக அறியப்பட்டவர்.
நூற்றுக்கணக்கான கிராமியப் பாடல்களை மேடைகளில் பாடி மக்களை ஈர்த்த லட்சுமி அம்மாளை, திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் அமீர். 2007-ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில், கார்த்தி மற்றும் சரவணன் நடனமாடிய “ஊரோரம் புளியமரம்” பாடலுக்கு அவர் அளித்த குரல், உலகத் தமிழர்கள் மத்தியில் அவரை பரவலாக அறிமுகப்படுத்தியது.
அந்தப் பாடலில் ஒலித்த அவரது இயல்பான குரல் வளமும், கிராமிய மணம் கமழும் பாடல் சொல்லும் பாணியும், பாடலை காலம் கடந்தும் நினைவில் நிற்கச் செய்தது.
சமீப காலமாக முதுமை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் பலரும், திரைத்துறையினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கிராமிய இசையின் ஒரு முக்கியமான குரலாக இருந்து வந்தவர் லட்சுமி அம்மாள், அவரது இழப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.