
புல்வாமாவில் கடந்த மாதம் 14ஆம் தேதி, இந்திய துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. உலக நாடுகளும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது, இந்திய விமானப்படையினர் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்திய ராணுவ நடவடிக்கையை இந்திய நடிகர், நடிகைகள், பலர் பாராட்டினர். நடிகை பிரியங்கா சோப்ராவும் வரவேற்றிருந்தார். இதனால் பாகிஸ்தானில் பிரியங்கா சோப்ராவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிரியங்கா சோப்ரா, யுனிசெப்பின் நல்லெண்ண தூதராக இருக்கிறார். இதன்மூலம் நடுநிலையாக செயல்பட வேண்டிய அவர், இந்திய ஆயுதப் படைகளுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் எனவே இந்த பதவியை அவர் வகிக்கக் கூடாது என்று சமூகவலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர் பாக்கிஸ்த்தானை சேர்த்தவர்கள்.
இந்தியப்படைகளுக்கு ஆதரவு தெரிவித்தால், யுனிசெப் நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும், இல்லாவிட்டால் அவரை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி 2200 பேர் கையெழுத்திட்டு ஆன்லைன் மூலம் யுனிசெப் மனு அளித்துள்ளனர். ப்ரியங்கா நீக்கப்படுவாரா அல்லது நீடிப்பார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.